மொத்தமாக தூக்கிய மர்மநபர்கள்., கொந்தளிப்பில் குஷ்பு.! டிஜிபி அலுவலத்தில் புகார்.!
kushboo sunder twitter account hacked
தமிழகத்தின் பிரபல நடிகையும், அரசியல்வாதியுமான நடிகை குஷ்புவின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் வலைதள பக்கம் மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டு, அவரின் அனைத்து பதிவுகளும் நீக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் தனது நடிப்புத் திறமையால் தமிழக மக்களின் ஆதரவைப் பெற்றவர் நடிகை குஷ்பு. தற்போது குஷ்பு தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். ஆரம்ப காலத்தில் திமுகவின் ஆதரவாளராக தன்னை காட்டிக் கொண்ட நடிகை குஷ்பு, பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து, அக்கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.
பின்னர், காங்கிரஸ் கட்சியின் மீது அதிருப்தி காரணமாக, பாஜகவில் இணைந்தார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், நடிகை குஷ்பு ஆயிரம்விளக்கு தொகுதியில் பாஜக வேட்பாளராக களம் இறக்கப்பட்டார்.
இந்நிலையில், நடிகைகுஷ்புவின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கம் மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டு உள்ளது. மேலும், அவர் பதிவிட்டு இந்த அனைத்து பதிவுகளும் மொத்தமாக நீக்கப்பட்டுள்ளது. 13 லட்சம் பின்பற்றுபவர்களை கொண்டுள்ள நடிகை குஷ்புவின் ஐடி ஹேக் செய்யப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து நடிகை குஷ்பு தெரிவிக்கையில், "இது மிகவும் கண்டிக்கத்தக்க செயல். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பாகவே எனது டுவிட்டர் பக்கத்துக்குள் நான் செல்ல முடியவில்லை. இந்நிலையில், இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது.
இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இது குறித்து டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளேன். ஒரு தனிப்பட்ட ஒரு ட்விட்டர் அக்கவுன்ட்டை ஒருவரால் எப்படி ஹேக் செய்ய முடியும் என்று என்னால் நம்பமுடியவில்லை. ஹேக் செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.
English Summary
kushboo sunder twitter account hacked