கொல்கத்தா: குற்றவாளிகளுக்கு ஜாமீனா? மீண்டும் வெடிக்கும் மருத்துவர்களின் போராட்டம்!
Kolkatta Case Again protest announce
கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில், முக்கிய குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, மேற்கு வங்க மருத்துவர்கள் கூட்டமைப்பு மீண்டும் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் கொல்கத்தா ஆர்ஜி கார் மருத்துவக் கல்லூரியில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
நாடுமுழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில், கைது செய்யப்பட்டிருந்த மருத்துவ கல்லூரியின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் மற்றும் முன்னாள் காவல்துறை அதிகாரி அபிஜித் மோண்டல் ஆகிய இருவருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது.
சிபிஐ அதிகாரிகள் 90 நாள்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால் இருவருக்கும் ஜாமீன் கிடைத்திருப்பதை அறிந்த மருத்துவர்களும், பொதுமக்களும் சிபிஐ அதிகாரிகளுக்கு கடும் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்த நிலையில், மேற்கு வங்க மருத்துவர்கள் கூட்டமைப்பு, ஐந்து மருத்துவ சங்கங்களுடன் இணைந்து டிசம்பர் 26 வரை 10 நாட்கள் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது.
“சட்டத்துக்கு உட்பட்டு அமைதியான முறையில் போராட்டம் நடத்த அனுமதி கேட்டுள்ளோம். சிபிஐ விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என கோருகிறோம்,” என மருத்துவர்கள் கூட்டமைப்பின் நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.
English Summary
Kolkatta Case Again protest announce