விஜயை கைது செய்தால்... நாளை அனைத்து கட்சி தலைவர்களுக்கும் சிக்கல்... டிடிவி தினகரன் பேட்டி! - Seithipunal
Seithipunal


கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் தவெக தலைவர் விஜய்யை கைது செய்வது தவறான முன் உதாரணமாக அமைந்து விடும் என்று, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் பேட்டியில்,கரூர் சம்பவத்தில் தவெக தலைவர் விஜய் தார்மீக பொறுப்பேற்றிருக்க வேண்டும். ஆனால் தார்மீக பொறுப்பு குற்றச் செயலை குறிக்காது. அவர் கைது செய்யப்பட்டால், இது தவறான முன்னுதாரணமாக மாறும் என்பதால் முதல்வர் நிதானமாக செயல்படுகிறார். 

முதல்வர் ஸ்டாலின் 50 ஆண்டு அனுபவமிக்கவர். நான் உண்மையைச் சொல்லினால், அதற்கு முதல்வர் ஆதரவாக செயல்படுவதாக சொல்கிறார்கள்.

அனைத்து கட்சிகளும் பேரணி, பொதுக்கூட்டம், மாநாடு நடத்துகிறோம். தவறு நடந்தால், அனைத்து தலைவர்களையும் கைது செய்ய வேண்டிய நிலை உருவாகும். இது பின்னர் திமுகவையும் பாதிக்கும். கரூர் சம்பவத்தை வைத்து முதல்வர் ஸ்டாலினை உயர்த்திப் பேசவில்லை; உண்மையைப் பேசுகிறேன்.

தவெக தலைவர் கைது செய்யப்பட்டால் தவறான முன் உதாரணமாக மாறும். இது அனைத்து கட்சிகளையும் பாதிக்கும். தூத்துக்குடி சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்த போது அந்தத் துறைக்கு தலைவராக இருந்த பழனிசாமி பொறுப்பேற்றாரா? 

கரூர் சம்பவத்தை வைத்து பழனிசாமி தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துகிறார். அவர் தலைமையை ஏற்றுக் கொண்டாலும், கூட்டணிக்கு நாங்கள் செல்ல முடியாது.

கரூர் சம்பவம் ஒரு விபத்துதான்; இதில் யாரும் குற்றம் கொண்டவர் அல்ல. 2026 தேர்தலில் பழனிசாமியின் துரோகத்தை வீழ்த்தி வெற்றிபெறுவோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Karur Stampede TN Govt TVK Vijay AMMK TTV


கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...



Advertisement

கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...




Seithipunal
--> -->