பள்ளி மற்றும் திரையரங்குகளை திறப்பது எப்போது? முதலமைச்சர் வெளியிடப் போகும் அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


கோவில்பட்டியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, தமிழகத்தில் கொரோனாவை நாம் கட்டுப்படுத்தி உள்ளோம். இனி பண்டிகை காலம் என்பதால் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கொரோனாவை கட்டுப்படுத்த அரசு தீவிரம் காட்டி வருகிறது. 

முதலமைச்சர் மாவட்டம் வாரியாக சென்று கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்து வருகிறது. தமிழக அரசின் கொரோனா தடுப்பு பணிகளை, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் பாராட்டியுள்ளார். பள்ளிகள், திரையரங்குகள் திறப்பது குறித்து மருத்துவ குழுவின் அறிக்கையை பெற்று முதலமைச்சர் விவாதித்துள்ளார். 

பள்ளி மற்றும் திரையரங்குகள் திறப்பது குறித்து மருத்துவ குழுவின் அறிக்கை அடிப்படையில் முதலமைச்சர் விரைவில் நல்ல முடிவை அறிவிப்பார். நடிகர் ரஜினிகாந்த் ரசிகர் மன்ற நிர்வாகிகள் ஆலோசனை செய்து வருவது அவரது உரிமை. ரஜினி அரசியலுக்கு வருவது அவருடைய தனிப்பட்ட உரிமை. ரஜினி தேர்தலுக்கு முன்பு அரசியலுக்கு வந்தாலும் அல்லது எப்போது வந்தாலும் அந்த முடிவு எடுக்கும் உரிமை அவருக்கு உண்டு. 

அதிமுகவை பொறுத்தவரை மற்றவர்களை ஒப்பிட்டு பார்க்கவில்லை. அதிமுக தேர்தல் பணிகள் முழுவீச்சில் மேற்கொண்டு வருகிறோம். இந்த ஆட்சியில் மக்களுக்கு தேவை என்பதே இல்லை. மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் தொடர்ந்து 3 முறை வெற்றி பெற்றார்.  தற்போது, 3 வது முறையாக அதிமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

kadambur raju press meet about school open


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->