விஜய் ஓர் எடுப்பார் கைப்பிள்ளை - ஜவாஹிருல்லா விமர்சனம்! - Seithipunal
Seithipunal


“தவெக தலைவராக விஜய் இருப்பது, அவர் ஓர் எடுப்பார் கைப்பிள்ளை என்பதையே வெளிப்படுத்துகிறது. அவரது வீட்டில் சோதனை நடத்திய அதிகாரியை உடனே கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக நியமித்தது மக்கள் நம்பிக்கையை தொலைத்த செயலாகும்” என மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், ஜூலை 6ல் சிறுபான்மையினருக்கான உரிய பிரதிநிதித்துவம் மற்றும் வக்பு திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி பேரணி, மாநாடு நடத்தப்படுவதாக தெரிவித்தார்.

மக்களவையில் 543 பேரில் 24 முஸ்லிம்கள் மட்டுமே உள்ளனர். தமிழக சட்டசபையில் 14 பேர் இருக்க வேண்டிய நிலையில் 7 பேர் தான் உள்ளனர். உள்ளாட்சிகளிலும் முஸ்லிம் பிரதிநிதித்துவம் குறைந்துள்ளது. இது அரசியல் கட்சிகளின் நோக்கத்தை காட்டுகிறது என அவர் சுட்டினார்.

வக்பு திருத்தச் சட்டம் உள்ளிட்ட பிரச்சனைகளில் கூட்டணி கட்சிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாசிசத்துக்கு எதிராக திமுக கூட்டணியில் உள்ளோம் என்றும் கூறினார்.

அதே நேரத்தில், ஐ.நா. பரிந்துரைபோல் சிறுபான்மையினருக்கு விகிதாச்சார அடிப்படையில் தனித் தொகுதி வழங்கும் திட்டத்தை இந்தியாவிலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Jawahirulla say about TVK Vijay


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->