370 சிறப்பு அந்தஸ்து நீக்கம்! வளர்ச்சி பாதையில் காஷ்மீர் - காங்கிரஸ்தலைவர் பெருமிதம்!
Jammu and Kashmir congress Article 370 Special Status
முன்னாள் மத்திய அமைச்சர், காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித், பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதிலிருந்து ஜம்மு காஷ்மீர் வளர்ச்சி பெற்று வருவதாக தெரிவித்திருக்கிறார்.
இந்தோனேசியா பயணித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் குழுவில் அவர் பங்கேற்றார். அங்கு செய்தியாளர்களிடம் பேசும் போது, “370 அமலிலிருந்தபோது காஷ்மீர் தனிச்சிறப்புடன் இருந்தது. இந்தியாவின் முழுமையான பகுதியாக பலர் உணரவில்லை; புறக்கணிப்பு உணர்வு இருந்தது. ஆனால் 2019-ல் மத்திய அரசு அதை ரத்து செய்த பிறகு, அந்த உணர்வு மாறி, தற்போது காஷ்மீர் ஒருங்கிணைந்த பகுதியாக வளர்ந்து வருகிறது” என்றார்.
“யூனியன் பிரதேசமாக மாறிய பின்னர் 65% வாக்குகள் பதிவானது, வளர்ச்சியின் அறிகுறியாகும்” என்றும் சல்மான் குர்ஷித் சுட்டிக்காட்டினார்.
குறிப்பு: இதற்கு முந்தைய காலங்களில், அவர் பிரிவு 370-ஐ ரத்து செய்வது குறித்து எதிர்மறை கருத்தை வெளியிட்டிருந்தார்.
காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் பாஜக நடவடிக்கைகளை சில நேரங்களில் நேரடியாக பாராட்டிவர, இப்போது சல்மான் குர்ஷித்தின் இந்த நுண்ணிய ஆதரவு, காங்கிரசுக்குள் குழப்பத்தை உருவாக்கி இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கணிக்கின்றன.
English Summary
Jammu and Kashmir congress Article 370 Special Status