அதிரடி! நமது சகோதரிகளின் குங்குமத்தை அகற்ற யாராவது துணிந்தால், அவர்களின் முடிவு தான் எல்லை...! - பிரதமர் மோடி
If anyone dares to remove SINDHOOR of our sisters their decision limit PM Modi
இன்று குஜராத் மாநிலம் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அங்குள்ள தாஹோத்தில் நடைபெற்று பேரணியில் கலந்து கொண்டு உரையாடினார்.

பிரதமர் நரேந்திர மோடி:
அப்போது அவர் தெரிவித்ததாவது,"கடந்த 2014ஆம் ஆண்டு இதே தினத்தில் (மே 26- 2014) ஆம் ஆண்டு முதல் முறையாக பிரதமரானேன். நாடு முழுவதும் 70 வழித்தடங்களில் வந்தே பாரத் ரெயில்கள் இப்போது இயக்கப்படுகின்றன.
மக்கள் ஹோலி, தீபாவளி மற்றும் வினாயகர் பூஜை போன்ற பண்டிகைகளின் போது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்கிப் பயன்படுத்த வேண்டும்.நமது நாட்டின் முன்னேற்றத்திற்குத் தேவையான அனைத்தும் இந்தியாவில் இங்கேயே செய்யப்பட வேண்டும்.
பின்தங்கிய பகுதிகளுக்கு வளர்ச்சியை எடுத்துச் செல்வதே எங்கள் அரசாங்கத்தின் கொள்கை. நமது சகோதரிகளின் குங்குமத்தை அகற்ற யாராவது துணிந்தால், அவர்களின் முடிவு நெருங்கிவிட்டது.
பிரிவினைக்குப் பிறகு உருவான நாடு இந்தியா மீதான வெறுப்பில் வாழ்கிறது.பாகிஸ்தானின் ஒரே நோக்கம் இந்தியாவுடனான பகைமை மற்றும் பாரதத்திற்கு தீங்கு விளைவிக்க வேண்டும் என்பதே.
இந்தியாவின் இலக்கு வறுமையை ஒழித்தல், பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துதல் மற்றும் வளர்ந்த நாடாக மாறுதல்" எனத் தெரிவித்துள்ளார்.இதற்கு கரகோஷங்கள் கூடிய ஆரவாரம் எழுந்தது பிரதமர் மோடி அவர்களின் உரைக்காக.
English Summary
If anyone dares to remove SINDHOOR of our sisters their decision limit PM Modi