என்னை இப்படி சொல்லிட்டீங்க!நேற்று முளைத்த காளானுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது...! - விஜயை சாடிய பி.கே சேகர்பாபு
I cant answer everything mushroom that sprouted yesterday PK Sekarbabu about Vijay
தமிழக வெற்றிக் கழக தலைவர் ''விஜய்'' அவர்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் டெல்லி பயணத்தை விமர்சித்து அறிக்கை ஒன்று வெளியிட்டிருந்தார்.

இதுகுறித்து அமைச்சர் பி.கே.சேகர்பாபுவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.அதற்கு பதில் தெரிவித்த அவர் குறிப்பிட்டதாவது,"நேற்று முளைத்த காளான்களுக்கு எல்லாம் இன்று பதில் சொல்ல தயாராக இல்லை.
களத்திற்கு வரட்டும் அவர்கள் எந்த வகையில் அடிக்கிறார்களோ அதை விட 100 மடங்கு வேகமாக ஒரே அடியில் பிடரி சிலிர்க்கின்ற வகையில் அடிப்பதற்கு தி.மு.க. களத்தில் தயாராக நிற்கின்றது.
ஏதோ ஒரு நாள் அறிக்கையில் ஏதோ ஒருநாள் ரோடு ஷோ செய்து விட்டு செல்கின்ற முதலமைச்சர் இல்லை எங்கள் முதலமைச்சர். அனுதினமும் மக்களோடு மக்களாக பயணிக்கக்கூடியவர்.
2026-ம் ஆண்டு மகுடம் சூட்ட தமிழக மக்கள் தயாராக இருக்கிறார்கள். இது போன்ற அறிக்கைகளால் திட்டமிட்டு கட்டமைக்கப்படுகின்ற இந்த கட்டுமானம் கடற்கரை கட்டிய மணல் கோட்டைக்கு சமமானது.
நிச்சயம் தகர்க்கப்படும், தகர்த்து எறியப்படும்"என அதிரடியாக பதில் தெரிவித்துள்ளார்.இது தற்போது இணையத்தில் உருவெடுத்து வேகமாக பரவி வருகிறது.
English Summary
I cant answer everything mushroom that sprouted yesterday PK Sekarbabu about Vijay