ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. வாக்களிக்க வந்த தேமுதிக வேட்பாளர் ஆனந்துக்கு எதிர்ப்பு.! - Seithipunal
Seithipunal


ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவேரா கடந்த டிசம்பர் 4ம் தேதி உடல் நலக்குறைவால் காலமானதை அடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து இன்று (பிப்ரவரி 27ஆம் தேதி) ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதனிடையே வேட்புமனு மற்றும் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்து இறுதியாக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 75 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.  இதனையடுத்து ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலையொட்டி சுமார் 20 நாட்களுக்கும் மேலாக நடைபெற்ற பிரச்சாரம் நேற்று முன்தினம் நிறைவடைந்தது.

இந்த இடைத்தேர்தலுக்காக 52 இடங்களில் 238 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் வரிசையில் நின்று ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேமுதிக கட்சியின் சார்பாக ஆனந்த் போட்டியிடுகிறார். இந்த நிலையில் அவர் கட்சி துண்டு மற்றும் கட்சியின் கரை வேட்டியுடன் வாக்கு செலுத்த வந்த தேமுதிக வேட்பாளருக்கு தேர்தல் அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதன் பின்னர்  தேர்தல் அதிகாரிகளின் அறிவுறுத்தலை தொடர்ந்து கட்சியின் அடையாளமின்றி வாக்களித்து சென்றார் தேமுதிக வேட்பாளர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Erode East by election Opposition to DMDK candidate Anand


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->