அன்று #GoBackModi; இன்று #WelcomeModi.. திமுகவை ரவுண்டு கட்டிய ஈ.பி.எஸ்.!!
EPS criticized as DMK BJP back door alliance
"தமிழர் உரிமை மீட்போம் தமிழ்நாடு காப்போம் என்பது அதிமுகவின் தேர்தல் முழக்கம்" அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் யாராவது பிறந்தநாள் இன்று அதிமுகவினரால் கொண்டாடப்படும் நிலையில் அதிமுகவின் தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி "திமுக எம்.பிக்கள் தமிழ்நாடு மக்களின் பிரச்னைக்களுக்காக குரல் கொடுக்கவில்லை. நீட் தேர்வை திமுக அரசு இன்னும் ரத்து செய்யவில்லை.காவிரி நதி நீர் பிரச்னை வந்த போது தமிழ்நாடு மக்களுக்காக அதிமுக அரசு நல்ல தீர்ப்பை பெற்றுக்கொடுத்தது.
அதிமுக எம்.பிக்கள் இரு அவைகளிலும் அழுத்தம் கொடுத்து ஒத்தி வைக்கும் அளவுக்கு போராடியவர்கள். அந்த அழுத்தம் காரணமாகவே காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது.
ஆனால் தமிழக மக்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக எம்பிக்கள் தமிழர்களின் நலனுக்காகவும் தமிழகத்தின் நலனுக்காகவும் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பவில்லை. மாறாக பாஜகவை எதிர்ப்பதாக கூறும் திமுகவினர் அன்று #GoBackModi என்றார்கள், இன்று #WelcomeModi என்கிறார்கள். இதிலிருந்து பாஜகவுடன் ரகசிய கூட்டணி யார் வைத்திருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளலாம்" என குற்றம் சாட்டியுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி
English Summary
EPS criticized as DMK BJP back door alliance