திமுகவின் முக்கிய புள்ளி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது!  - Seithipunal
Seithipunal


வேளாங்கண்ணி : பைனான்சியர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், திமுக ஊராட்சி மன்ற தலைவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாகப்பட்டினம் மாவட்டம், தெற்குப் பொய்கைநல்லூரைச் சேர்ந்த பிரபல பைனான்சியர் மனோகர். இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். 

கொலையை தடுக்க சென்ற அவரது நண்பர் மணிவேலுவையும் மர்மக்கும்பல் அரிவாளால் வெட்டிவிட்டுச் சென்றது.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தனிப்படை அமைத்து மர்ம கும்பலை தேடிவந்த நிலையில், தெற்கு பொய்கைநல்லூரை சேர்ந்த 10 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். 

மேலும், இந்த கொலை வழக்கு சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான திமுக ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

dmk therku poikainallur maheshwaran arrest


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->