ஒன் டூ ஒன்! அறிவாலயத்தில் புகார் பெட்டி! திமுக நிர்வாகிகளை சந்தித்த முக ஸ்டாலின்!  - Seithipunal
Seithipunal


2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கும் தருணத்தில், வெற்றியை இலக்காக கொண்டு ஆளும் கட்சியான தி.மு.க. வியூகமிடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

ஜூன் முதல் வாரத்தில் இருந்து தொகுதி வாரியாக திமுக நிர்வாகிகளை நேரில் சந்திப்பதாக அக்கட்சியின் தலைவர் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், இன்று அண்ணா அறிவாலயத்தில் அவர் முதல் கட்டமாக சிதம்பரம், விழுப்புரம் மற்றும் உசிலம்பட்டி தொகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

மதுரையில் நடந்த பொதுக்குழு கூட்டத்தின் போது “ஒன் டூ ஒன் பேசுவோம்” என அறிவித்ததற்கேற்ப இந்தச் சந்திப்பு நடைபெறுகிறது. மேலும், குறைகள் இருந்தால் அங்கு வைக்கப்பட்டுள்ள புகார் பெட்டியில் எழுதி போடவும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMK MK Stalin 2026 Election


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->