தமிழக முன்னேற பெண்களின் பங்கு முக்கியமானது - துணை முதல்வர் உதயநிதி!
DMK Dpty CM Udhayanidhi Stalin
சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற மகளிர் சுய உதவிக் குழு தின விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார்.
அதில், “பெண்களின் விடுதலையே முன்னேற்றம் என நம்பிய திராவிட இயக்கம், பெண்களின் உரிமைக்காக உறுதியாக உள்ளது.
சொத்தில் சம உரிமை, தனிப்பட்ட காவல் நிலையங்கள், பாதுகாப்பான வேலை வாய்ப்புகள் உள்ளிட்ட பல முன்னேற்றங்களை தி.மு.க. ஆட்சியே கொண்டு வந்துள்ளது.
இன்று இந்தியாவே பார்த்து கற்கும் அளவுக்கு தமிழ்நாட்டில் மகளிர் சுய உதவிக் குழுகள் பலத்தோடு செயல்பட்டு வருகின்றன. அவை முன்வைக்கும் கோரிக்கைகள் உடனே நிறைவேற்றப்படுகின்றன.
இந்திய அளவில் எந்த துறையையும் எடுத்தாலும், தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. அதற்குப் பின்னுள்ள ஒருங்கிணைந்த முயற்சியில், தமிழ் மகளிரின் பங்கு மிக முக்கியமானது” என அவர் குறிப்பிட்டார்.
English Summary
DMK Dpty CM Udhayanidhi Stalin