ஜார்ஜியாவில் சிக்கி தவிக்கும் இந்திய சுற்றுலா பயணிகள்: மீட்கும் நடவடிக்கையில் இந்திய துாதரகம்..!
Indian Embassy in Georgia to rescue stranded Indian tourists
இஸ்ரேல், ஈரான் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. அதேவேளை, அணு ஆயுதத்தை உருவாக்க ஈரான் முயற்சித்து வருகிறது. இஸ்ரேல் மீது ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
இந்நிலையில், இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலால் விமான போக்குவரத்துக்கு இடையூறுகள் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, ராஜஸ்தானைச் சேர்ந்த 61 பேர் ஜார்ஜியாவில் சிக்கி தவிக்கும் நிலையில் உள்ளனர். அவர்கள் நாடு திரும்ப மத்திய அரசிடம் உதவி கோரியுள்ள நிலையில் அங்குள்ள இந்திய துாதரகம் அவர்கள் நாடு திரும்புவதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதாவது, கடந்த ஜூன் 08-ஆம் தேதி, ராஜஸ்தானை சேர்ந்த பட்டயக்கணக்காளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் உள்பட 61 பேர் ஜார்ஜியாவுக்கு சுற்றுலாவுக்கு சென்றுள்ளனர். அவர்கள் ஜார்ஜியாவிலிருந்து நேற்று (ஜூன்-13) நாடு திரும்புவதாக திட்டமிட்டிருந்துள்ளனர்.
இந்நிலையில் ஈரான் மற்றும் இஸ்ரேல் வான்வழித்தாக்குதலால் விமான போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது.இதனால் இவர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். பின்னர் பிரதமர் அலுவலகம் மற்றும் வெளியுறவு அமைச்சகத்திடம் நாடு திரும்ப உதவி கோரியுள்ளனர். இது தொடர்பாக ஜார்ஜியாவில் உள்ள இந்திய துாதரகம் கூறியதாவது:
சிக்கித் தவிப்பவர்களுக்கு உதவுவதற்காக அவசர உதவி எண்கள் தெரிவித்துள்ளோம். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதி மற்றும் மாற்று விமானங்கள் குறித்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று கூறியுள்ளது.
English Summary
Indian Embassy in Georgia to rescue stranded Indian tourists