எச்சரிக்கை: டெலிகிராம் யூஸ் பண்றவங்க கவனமா இருங்க.. ஆபத்து உங்களுக்கு தான்..!
Telegram users should be careful Police warn
இணையதளம் மற்றும் சமூக ஊடகங்களின் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. அதே அளவுக்கு சைபர் குற்றங்களும் அதிகரிக்கின்றன. இதில் பலரும் சிக்கி பணம் மற்றும் நற்பெயரையும் இழந்து வருகின்றன. சில நேரங்களின் இவ்வாறு சைபர் குற்றங்களால் பலர் உயிரையும் மாய்த்து கொள்கின்றனர்.
தற்போது, டெலிகிராம் செயலியை மர்ம நபர்கள் ஹேக் செய்து மோசடி செய்யும் சம்பவம் அதிகமாக நடைபெறுவதாகவும், சந்தேகத்துக்கு இடமான எந்த லிங்க்கையும் கிளிக் செய்ய வேண்டாம் என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

டெலிகிராம் செயலியை முடக்கி மர்ம நபர்கள் மோசடி செய்து வருகின்றதாக பொலிஸாருக்கு பல புகார்கள் வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். தற்போது 'வாட்ஸாப்' செயலியை போல, 'டெலிகிராம்' செயலியும் தகவல் பரிமாற்றத்துக்கு உலக முழுதும் பயன்படுத்தப்படுகிறது. வாட்ஸாப் போல பல கட்டுப்பாடுகளை இந்த செயலி பின்பற்றாததால், உலகம் முழுதும் பல்வேறு குற்ற செயல்களுக்கு இந்த செயலியை பலர் பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.
வெளிநாடுகளில் உள்ள மர்ம நபர்கள் சிலர், இந்தியாவில் பலரின் கணக்குகளை ஹேக் செய்து மோசடி செய்து வருவதாக கூறப்படுகிறது. அதாவது, டெலிகிராம் பயனாளர்களின் ஆர்வத்தை துாண்டும் வகையில் குறுஞ்செய்தியும், ஒரு லிங்க்கும் அவர்கள் அனுப்புகின்றனர். அதற்கு பதிலளிப்பவர்களுக்கு 'உங்களின் புகைப்படங்கள் ஆன்லைனில் உள்ளது. அதனை பெற கிளிக் செய்யவும்,' எனக் கூறி லிங்க் அனுப்புகின்றனர்.

அதனை 'கிளிக்' செய்ததும், டெலிகிராம் செயலிக்கு வரும் ஒரு முறை பயன்படுத்தும் கடவுச்சொல்லை கேட்கின்றனர். அதை பதிவு செய்துவிட்டால், உடனடியாக, குறிப்பிட்ட அந்த டெலிகிராம் கணக்கு ஹேக்கர்களின் கட்டுப்பாட்டுக்கு சென்று விடுகிறது. பிறகு அவர்கள், அதை பயன்படுத்தி பல வகைகளில் மோசடி செய்கின்றனர் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக இந்தியாவில் இத்தகைய மோசடிகள் அதிகம் நடந்து வருவதால் பல்லாயிரக்கணக்கான பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து, சமூக வலைதளங்களில் வரும் சந்தேகத்திற்கு இடமான எந்தவொரு இணைப்புகளையும் கிளிக் செய்ய வேண்டாம் என போலீசார் இணையதளம் மற்றும் சமூக ஊடகங்களை பயன்படுத்துவோருக்கு அறிவுறுத்துகின்றனர்.
English Summary
Telegram users should be careful Police warn