அப்பாவுக்காக போலீஸ் ஸ்டேஷனை அடித்து நொறுக்கி, சூறையாடிய மகன் மற்றும் நண்பன்; 04 தனிப்படை அமைத்து போலீசார் தேடுதல்.! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள வி.சத்திரப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில்நேற்று இரவு ஏட்டு பால்பாண்டி என்பவர் மட்டும் பணியில் இருந்துள்ளார். அப்போது அடையாளம் தெரியாத இரு நபர்கள் அத்துமீறி ஸ்டேஷனுக்குள் நுழைந்து, அங்கிருந்த போலீஸ் ஏட்டுவிடம் வாக்குவாதம் செய்துள்ளனர். அத்துடன் போலீஸ் ஸ்டேஷன் என்றும் பாராமல் அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடியுள்ளனர்.

இதனால் அங்கிருந்த கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்கள் நாசமாகியுள்ளனர். பின்னர் போலீஸ் ஏட்டுவை அறைக்குள் வைத்து வெளியில் தாழிட்ட அவர்கள், அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்த தங்கள் தெரிந்த போலீஸ் உயர் அதிகாரிகள் அங்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.

விசாரணையில் போலீஸ் ஸ்டேஷனை சூறையாடிய நபர்கள் வி.சத்திரப்பட்டியை சேர்ந்த முத்துவேல் மகன் பிரபாகரன் மற்றும் அவரது நண்பர் என்று தெரியவந்துள்ளது. பிரபாகரன் தந்தை முத்துவேல் என்பவரை, போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்று விட்டதாக தவறாக கருதி, இந்த செயலில் ஈடுபட்டதாக விவசாரணையில் தெரியவந்துள்ளது. அத்துடன், சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்வதற்காக, உசிலம்பட்டி டி.எஸ்.பி., தலைமையில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

போலீஸ் ஸ்டேஷன் சூறையாடப்பட்ட சம்பவம் பற்றிய தகவல் அறிந்த முன்னாள் அமைச்சர் உதயகுமார், நேரில் பார்வையிட சென்ற போது  அவரை போலீஸ் ஸ்டேஷனுக்குள் போலீசார் அனுமதிக்க மறுத்தனர். அத்துடன், எந்த தகவலையும் தெரிவிக்க மறுத்த போலீசார், உதயகுமாரையும், அவருடன் வந்தவர்களையும் கைது செய்தனர். இவ்வாறு போலீஸ் ஸ்டேஷனை பார்வையிட வந்த முன்னாள் அமைச்சர் மற்றும் உள்ளூர் எம்.எல்.ஏ., கைது செய்யப்பட்டதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Police form 04 special teams to search for people who looted a police station in Madurai district


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->