7507 கன அடியாக வந்த மேட்டூர் அணையின் நீர்வரத்து...! - Seithipunal
Seithipunal


கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக, சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டமும் மெதுவாக உயர்ந்து வருகிறது.

இந்நிலையில் கடந்த 12-ந்தேதி முதல் காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதன் முதலில் வினாடிக்கு 3000 கனஅடியாக திறக்கப்பட்ட தண்ணீர், பிறகு 5000 கன அடியாகவும், இரவு 8 மணியளவில் அது வினாடிக்கு 10,000 கனஅடியாகவும் அதிகரிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை முதல் பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீர் வினாடிக்கு 6000  கனஅடியாக குறைக்கப்பட்டது.அதே போல் அணைக்கு வரும் தண்ணீரும் அதிகரித்து காணப்படுகிறது.

அவ்வகையில், இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.91 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 7507 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இதன் காரணமாக அணையிலிருந்து வினாடிக்கு 6000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Mettur Dams water inflow reached 7507 cubic feet


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?


செய்திகள்



Seithipunal
--> -->