தமிழகத்தில் இன்று நான்கு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு!
IMD TN South heavy rain alert
தமிழகத்தில் இன்று நான்கு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் மழை உருவாகும் சூழல் நிலவுகிறது.
இதன்படி, நவம்பர் 8ஆம் தேதி தமிழகத்தின் சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பு அதிகம்.
மேலும், நாளை (நவம்பர் 9) திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும், அதனைத் தொடர்ந்து நவம்பர் 10 வரை வடதமிழகத்தின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, சென்னை நகரில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெப்பநிலை நிலவரப்படி, இன்று அதிகபட்சம் 33 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சம் 24 முதல் 25 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
English Summary
IMD TN South heavy rain alert