#சென்னை : திமுக பெண் கவுன்சிலர் கணவருடன் கைது! அடேங்கப்பா! இது வெர்லெவல் 'பிராடு' தனம்! - Seithipunal
Seithipunal


சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவை திருத்திய வழக்கில், திமுக பெண் கவுன்சிலர் கணவருடன் கைது செய்யப்பட்டு உள்ளார்.

சென்னை சோழிங்கநல்லூரைச் சேர்ந்தவர் அமர்ராம் (வயது 53). தொழில் அதிபரான இவர், கடந்து இரு மாதங்களுக்கு முன் சென்னை மெரினா காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.

அவரின் அந்த புகாரில், "திமுக பிரமுகர் கிருஷ்ணமூர்த்தி என்பவரிடம் இருந்து ரூ.25 கோடி மதிப்புள்ள 58 சென்ட் நிலம் ஒன்றை வாங்கினேன். 

தற்போது அந்த நிலத்தை திரும்பக் கேட்டு கிருஷ்ணமூர்த்தி மிரட்டி வருகிறார். மேலும், நிலம் தொடர்பான நீதிமன்ற வழக்கில் கிருஷ்ணமூர்த்தியின் ஆதரவாளர்கள் சிலர் என்னைக் கத்திமுனையில் மிரட்டி காரில் கடத்தினர்.

தொடர்ந்து, என்னிடம் விற்ற நிலத்தை மீண்டும் அவர்களே எழுதி வாங்கிக் கொண்டனர். சம்மந்தப்பட்டவர்களிடம் இருந்து என்னுடைய நிலத்தை மீட்டுத் தர வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.

புகாரின் அடிப்படையில் திமுக பிரமுகர் கிருஷ்ணமூர்த்தி, அவரின் மனைவி திமுக 124 வார்டு கவுன்சிலர் விமலா உள்ளிட்ட 10 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

கைது செய்யப்படுவதை தவிர்க்க, சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக கவுன்சிலர் விமலா, கணவர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்ஜாமீன் பெற்றதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், சென்னை எழும்பூர் 13-வது நீதிமன்றத்தில் நேற்று விமலா, அவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் ஆஜராகினர். 

அப்போது உயர்நீதிமன்ற முன்ஜாமீன் உத்தரவு காலாவதி ஆகிவிட்டதையும், முன்ஜாமீன் உத்தரவில் திருத்தங்களைச் செய்து இருப்பதையும் மாஜிஸ்திரேட்டு கண்டுபிடித்துவிட்டதாக தெரிகிறது.

இதனையடுத்து, திமுக கவுன்சிலர் விமலா, கணவர் கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவரையும் எழும்பூர் போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMK Counselor vimala arrest


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->