தவெக நிர்வாகி நிர்மல் குமார் கைது! காவல் நிலையத்தை முற்றுகையிட்ட தொண்டர்கள்! - Seithipunal
Seithipunal


 தமிழக வெற்றிக் கழகத்தின் திண்டுக்கல் தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.உ.எம். நிர்மல் குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவ சம்பந்தமாக நீதிபதியின் கருத்தை விமர்சித்து அவதூறு பதிவு வெளியிட்டதாக போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதன் பின்னணி விசாரணைக்காக, திண்டுக்கல் சாணார்பட்டி போலீஸ் நிர்மல் குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து, நிர்மல் குமாரின் கைது செயலுக்கு எதிராக தவெகினர் சாணார்பட்டி காவல்நிலையத்தை முற்றுகையிட்டு கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்படுத்தப்பட்டது. அவர்கள், நிர்மல் குமாரை உடனடியாக நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

பல மணி நேரமாக காவல் நிலையத்தில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தவெகவினர் சாலை மறியலில் ஈடுபட்டு போராட்டத்தை தொடர்ந்தனர். இதற்கு போலீசார் நடவடிக்கை எடுத்து சில தவெகவினரை கைது செய்தனர்.

சம்பவத்தால் திண்டுக்கல் பகுதியில் சாலை போக்குவரத்து சீர்குலைந்தது மற்றும் பரபரப்பான சூழல் உருவானது. நிர்மல் குமாரின் மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

dindigul TVK Arrest Nirmal Kumar 


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->