மத்திய அமைச்சரவையில் மாற்றம்; தர்மேந்திர பிரதானுக்கு வேறு இலாகா வழங்க வாய்ப்பு; பெண்​கள் பட்​டியலில் தமிழக பாஜக​வினருக்​கும் இணை அமைச்​சர் பதவி..? - Seithipunal
Seithipunal


பிரதமர் நரேந்​திர மோடி தலைமையிலான, மத்திய அமைச்சரவையில் புதிய மாற்றம் செய்யப்படவுள்ளது. இதில் பெண்​களுக்கு கூடு​தல் பிர​தி​நி​தித்​து​வம் வழங்​கப்​படும் எனத்கூறப்படுகிறது. அத்துடன்,  நீட் தேர்வு வினாத்தாள் கசிவு உள்ளிட்ட காரணங்களுக்கு சிஜேபியினர் போராட்டத்திற்கு பின்னர் கல்வி அமைச்​சர் பதவியை ராஜி​னாமா செய்த தர்மேந்திர பிரதானுக்கு வேறு இலாகா வழங்​கப்​படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்​பாக, இரு​பதுக்​கும் மேற்​பட்ட அமைச்​சர்​களின் இலா​காக்​களை மாற்ற திட்​ட​மிட்​டுள்​ளதாகவும், மேலும் சிலரை புதி​தாக அமைச்​சர​வை​யில் சேர்க்​க​வும் சிலரை அமைச்​சர் பதவியிலிருந்து விடு​வித்து கட்​சிப் பணிக்கு அனுப்​ப​வும் பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி, மத்​திய வர்த்தக அமைச்​சர் பியூஷ் கோயல் பாஜக​வின் தேசி​யப் பொருளாள​ராக நியமிக்​கப்​பட்​டுள்​ளார். இருப்​பினும், அவர் தொடர்ந்து அமைச்​ச​ராக நீடிப்​பார் என்று தெரி​கிறது. தற்போது இந்​தி​யா, அமெரிக்கா இடையி​லான வர்த்தக ஒப்​பந்​தப் பேச்​சு​வார்த்தை நடை​பெற்று வரு​கிறது. இந்​தப் பேச்​சு​வார்த்தை முக்​கிய​மான கட்​டத்​தில் உள்ள நிலை​யில் அவருடைய இலாகா மாற்​றப்​ப​டாது என்று கூறப்படுகிறது.

தர்​மேந்​திர பிர​தான் கல்வி அமைச்​சர் பதவியை ராஜி​னாமா செய்துள்ள நிலையில், அவருக்கு வேறொரு துறைக்கு மத்​திய அமைச்​ச​ராக நியமிக்​கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்​படு​கிறது. மேலும், நாடாளு​மன்​றத்​தில் கிரண் ரிஜிஜு​வின் அறைக்கு அரு​கிலேயே இவருக்​கும் ஒரு அறை ஒதுக்​கப்​பட்​டுள்​ளது. பொது​வாக இத்​தகைய அறை கேபினெட் அமைச்​சர்​களுக்கு மட்​டுமே ஒதுக்​கப்​படு​வது குறிப்பிடத்தக்கது.

அத்துடன், மத்​திய அமைச்​சர​வை​யில் பெண்​களுக்கு அதிக பிர​தி​நி​தித்​து​வம் அளிப்​ப​தற்​கான முயற்​சிகளும் நடை​பெறுகின்​றன. அந்த வகை​யில் ராஜஸ்​தானைச் சேர்ந்த டாக்​டர் அல்கா குர்​ஜர் பெயர் பரிசீலிக்​கப்​படு​கிறது. பெண்​கள் பட்​டியலில் தமிழக பாஜக​வினருக்​கும் இணை அமைச்​சர் பதவி கிடைக்க வாய்ப்புள்​ளது.

அதேப்போன்று தென்​னிந்​தி​யா​வுக்​குப் போது​மான பிர​தி​நி​தித்​து​வம் இல்லை என்ற புகார் உள்ள நிலையில், தற்போது சுமார் 10 பேர் அமைச்​சர்​களாக உள்​ளனர். இவர்​களில் மூவர் கேபினெட் அமைச்​சர்​கள், ஏழு பேர் இணை அமைச்​சர்​கள் ஆவர். எனவே, கூட்​ட​ணிக் கட்​சிகளின் கோரிக்​கைகளும் இந்த அமைச்​சரவை மாற்​றத்​தில் ஏற்​கப்படவுள்​ளது.

அடுத்து,பீஹாரின் எல்​ஜேபி தலை​வரும் மத்​திய உணவு அமைச்​சரு​மான சிராக் பாஸ்​வான், தனக்கு அதிக முக்​கி​யத்​து​வம் வாய்ந்த ஒரு அமைச்​சகத்​தைக் கோரு​கிறார். மகா​ராஷ்டி​ரா​வில், 13 மக்​களவை உறுப்​பினர்​களைக் கொண்​டுள்ள ஏக்​நாத் ஷிண்டே தரப்​பும், அமைச்​சர​வை​யில் கூடு​தலாக ஒரு இடம் கோரி வரு​கிறது.

இதுகுறித்து பிரதமர் மோடி, மகா​ராஷ்டிர முதல்​வர் தேவேந்​திர பட்​ன​விஸுடன் ஆலோ​சனை செய்​துள்ளார். அதன்படி, சிவசேனா மற்​றும் என்​சிபி ஆகிய கட்​சிகளின் இரு பிரிவு​கள் தொடர்​பான விவ​காரங்​களுக்கு விரை​வான தீர்வு காண்​ப​தற்​கும் முக்​கி​யத்​து​வம் அளிக்​கப்​பட்டு வரு​கிறது. இதன் பின்​னணி​யில் அவர்​களுக்​கும் அமைச்​சர​வை​யில் இடமளிக்க முடிவு செய்திருப்பதே காரணம் என கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Dharmendra Pradhan likely to be given another portfolio in the central cabinet


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...


செய்திகள்



Seithipunal
--> -->