தமிழகத்தில் திட்டமிட்டபடி டிசம்பர் 2 கல்லூரிகள் திறக்கப்படும்.! அதிரடியாக அறிவித்த அமைச்சர் கே.பி.அன்பழகன்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கடந்த 16ம் தேதி பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு, பெற்றோர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கையால், பள்ளி கல்லூரிகள் திறப்பை  தமிழக அரசு ஒத்திவைத்தது.

அதே சமயத்தில், வரும் டிசம்பர் இரண்டாம் தேதி தமிழகத்தில் திட்டமிட்டபடி எம்.இ., எம்.டெக்., எம்.பிளான்., எம்.ஆர்க்., எம்.எஸ்சி. ஆகிய முதுகலைப் படிப்புகளில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்குத் திட்டமிட்டபடி கல்லூரிகள் திறக்கப்படும் என்று அறிவித்தது.

இந்நிலையில், தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் தெரிவித்ததாவது, "திட்டமிட்டபடி வரும் டிசம்பர் மாதம் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். தமிழகத்தில் எம்.இ., எம்.டெக்., எம்.பிளான்., எம்.ஆர்க்., எம்.எஸ்சி. ஆகிய முதுகலைப் படிப்புகளில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு வரும் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.

இந்த மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதினால், தொற்று குறித்த அச்சம் தேவையில்லை. அதேபோல் செய்முறை வகுப்புகளை ஆன்லைன் மூலம் நடத்த இயலாது என்பதினால், வரும் டிசம்பர் மாதம் இரண்டாம் தேதி திட்டமிட்டபடி கல்லூரிகள் திறக்கப்படுவது உறுதி. அதே சமயத்தில் புயல், மழை ஆகியவை ஏற்பட்டால் கல்லூரிகள் திறப்பதை தள்ளி வைப்பது குறித்து தமிழக அரசு ஆலோசிக்கும்" என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

dec 2 collage open in tn


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->