எஸ்.வி சேகர் கைதா? அதிரடியாக பாய்ந்த வழக்கு.! காவல் ஆணையர் நடவடிக்கை.! - Seithipunal
Seithipunal


பாஜகவைச் சேர்ந்த எஸ்.வி சேகர் தேசியக் கொடியை அவமதித்ததாக கூறி, காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆகஸ்ட் 11 ஆம் தேதி புகார் அளிக்கப்பட்டது. 

மேலும், தமிழக முதலமைச்சரின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசியும், தேசியக் கொடியை அவமதித்தும் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்ட எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ராஜரத்தினம் என்பவர் புகார் அளித்திருந்தார்.  

இந்த நிலையில், பாஜக பிரமுகரும் திரைப்பட நடிகருமான எஸ்.வி சேகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தேசிய கொடியை மத அடையத்துடன் ஒப்பிட்டு பேசி அவமதித்ததாக எஸ்.வி.சேகர் மீது சென்னை சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தமிழக முதல்வர் குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசியதாக எஸ்.வி.சேகர் மீது புகார் எழுந்து. இந்த விஷயம் தொடர்பாக சட்ட ஆலோசனைக்கு தகவல் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆலோசனை அறிக்கையின் முடிவுப்படி, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் நேற்று தெரிவித்திருந்த நிலையில் இன்று எஸ்.வி சேகர் கைது செய்யப்ட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வழக்குப்பதிவு செய்யப்பட்டதையடுத்து  எஸ்.வி சேகர் விரைவில் கைது செய்யப்படுவார் கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

cyber crime case filed against sv seakar


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?


செய்திகள்



Seithipunal
--> -->