குஷ்பு புகைப்படம் மீது சாணி வீச்சு - ஆர்ப்பாட்டத்தில் அதிரவைத்த காங்கிரஸ்.!  - Seithipunal
Seithipunal


சமீபத்தில் நெட்டிசன் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரான குஷ்பு, "உங்களைப் போலச் சேரி மொழியில் என்னால் பேச முடியாது. மணிப்பூர் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதைக் கண்களைத் திறந்து பாருங்கள்" என்று ட்வீட் செய்திருந்தார். இதில் சேரி என்ற வார்த்தை சர்ச்சையானது.

இந்த நிலையில், தமிழக காங்கிரஸ் எஸ்.சி துறை தலைவர் ரஞ்சன் குமார் தலைமையில் காங்கிரஸார் குஷ்பூ வீட்டின் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, சேரி என்கிற வார்த்தைக்கு மன்னிப்பு கேட்க கோரி குஷ்புவின் உருவ பொம்மையின் மீது மாட்டு சாணத்தை வீசியும், துடப்பத்தாலும் அடித்துள்ளனர். 

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ரஞ்சன் குமார், ‘’பட்டியல் இன மக்களை கொச்சைப்படுத்தும் விதத்தில் குஷ்பூ பேசியுள்ளார். குஷ்புவின் வார்த்தைகளை மத்திய இணை அமைச்சர் எல்.முருகனும், வி.பி.துரைசாமியின் ஆதரிக்கிறார்களா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும். குஷ்புவின் எக்ஸ் பக்கத்தில் இருந்து இதுவரை அவர் வெளியிட்ட ட்வீட் நீக்கப்படாமல் உள்ளது.

மன்னிப்பு கேட்க வேண்டும். அவரது ட்வீட்டை நீக்க வேண்டும். இல்லையெனில் காங்கிரஸ் சார்பில் தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும். நாளை தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்களில் காங்கிரஸ் எஸ்சி, எஸ்டி அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். குஷ்புவின் செயலுக்கு நடிகர் சங்கத்திடம் மனு அளிப்போம்’’ என்று காட்டமாக பேசியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

congrass party protest in front of kushboo house


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->