"அவர் சார்பாக SORRY கேட்டுக்குறேன்!": கலைஞரின் பெயர் சொல்லிப் பேசிய அமைச்சர் ரஞ்சித் குமார் சார்பாக முதல்வர் விஜய் மன்னிப்பு!
CM Vijay Apologizes in Assembly for Minister Ranjith Kumars Direct Reference to Kalaignar Karunanidhi
தமிழ்நாடு சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் பெயரை நேரடியாகக் குறிப்பிட்டுப் பேசிய தவெக அமைச்சர் ரஞ்சித் குமார் சார்பாக, முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் பேரவையில் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கோரினார்.
சம்பவத்தின் பின்னணி: சட்டப்பேரவையில் நடைபெற்ற விவாதத்தின் போது உரையாற்றிய வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார், முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியைக் குறிப்பிடும் போது அவரது பெயரை நேரடியாகக் குறிப்பிட்டுப் பேசினார்.
திமுகவினர் கடும் எதிர்ப்பு: அவையில் உரையாற்றும் போது 'முன்னாள் முதல்வர்' என்று மட்டுமே குறிப்பிட வேண்டும் என்ற சட்டமன்ற மரபு உள்ளதைச் சுட்டிக்காட்டி, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இதற்கு உடனடியாகத் தங்களது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
முதலமைச்சர் விஜய் பதில் & மன்னிப்பு: திமுகவினரின் எதிர்ப்பைத் தொடர்ந்து குறுக்கிட்டுப் பேசிய முதலமைச்சர் விஜய், "அவையில் முன்னாள் தலைவரின் பெயரை நேரடியாகக் குறிப்பிட்டுப் பேசியது தவறுதான்" என்பதை ஒப்புக்கொண்டதுடன், "அமைச்சர் சார்பாக நான் 'Sorry' கேட்டுக்கிறேன்" எனத் தெரிவித்து வருத்தம் தெரிவித்தார்.
English Summary
CM Vijay Apologizes in Assembly for Minister Ranjith Kumars Direct Reference to Kalaignar Karunanidhi