தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில்,  - Seithipunal
Seithipunal


தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்ய உத்தரவிட வேண்டும் என்று, சென்னை உயர்நீதிமன்றத்தில் பெரியார் திராவிட கழகம் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் பெரியார் திராவிட கழக செயலாளர் கண்ணதாசன் என்பவர் தொடர்ந்துள்ள அந்த வழக்கில், "அரசு பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று சனாதன தர்மம் பற்றி தமிழக ஆளுநர் பேசி வருகிறார்.

மேலும், திராவிட இயக்கக் கொள்கைகளுக்கு எதிராக பேசும் ஆளுநர், தமிழக அரசு அனுப்பும் கோப்புகளுக்கு உரிய கையெழுத்து போடாமல், காலம் தாழ்த்துகிறார்.

சம்பளம் மற்றும் ஓய்வூதியம் பெறக்கூடிய பதவியான ஆரோவில் பவுண்டேஷன் தலைவராக உள்ள ஆளுநர், இந்திய அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிராக செயல்படுகிறார். எனவே, தமிழக ஆளுநரை பதவி நீக்க வேண்டும்" அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு மீதான விசாரணை விரைவில் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கபடுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Hc RNRavi Issue DK Appeal


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->