பிரபல சாமியார் சிவசங்கர் பாபாவுக்கு நிபந்தனை ஜாமீன் - சென்னை உயர்நீதிமன்றம்.! - Seithipunal
Seithipunal



பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பதியப்பட்ட வழக்கில், பிரபல சாமியார் சிவசங்கர் பாபாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் உள்ள பிரபல பள்ளியில் பயின்ற மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, சிவசங்கர் பாபா மீது வழக்குகள் பதியப்பட்டன. 

இந்த பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவிகள் அளித்த புகார்களின் அடிப்படையில், சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தின் கீழ் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

இந்த 7 வழக்குகளில் ஏற்கனவே செங்கல்பட்டு நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றுள்ள சிவசங்கர் பாபாவுக்கு, தற்போது சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.

அந்த நிபந்தனையில், விசாரணை அதிகாரிக்கு தெரிவிக்காமல் தமிழகத்தை விட்டு எங்கேயும் வெளியே செல்லக்கூடாது என்று, சிவசங்கர் பாபாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chennai HC Bail Issue to SivaShankar Baba


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->