#சற்றுமுன் || சென்னையில் பேருந்து கண்ணாடி உடைப்பு.!
CHENNAI COLLEGE STUDENT ATTACK GOVT BUS
சென்னை மாநகர் பேருந்து கண்ணாடியை உடைத்த இரண்டு கல்லூரி மாணவர்களை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
சென்னை வில்லிவாக்கத்தில் மாநகர பேருந்து கண்ணாடியை உடைத்த கல்லூரி மாணவர்கள் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
வில்லிவாக்கத்தில் இன்று அரசுக்கு சொந்தமான மாநகர் பேருந்தின் மீது 3 கல்லூரி மாணவர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். இதனால் பேருந்தின் கண்ணாடி உடைந்து உள்ளது.
இதனை அடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, கல்லூரி மாணவர்கள் மூன்று பேரில் இரண்டு பேரை அதிரடியாக கைது செய்தனர்.
அதில் ஒரு மாணவர் போலீசாரிடம் இருந்து தப்பி ஓடியதாக சொல்லப்படுகிறது. தப்பி ஓடிய அந்த கல்லூரி மாணவரை போலீசார் தேடி வருகின்றனர்.
நேற்று சென்னை மதுரவாயல் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த காவலர் மீது கல்லூரி மாணவர்கள் 3 பேர் கற்களை வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்திய இந்த சம்பவத்தில் 3 மாணவர்களில் ஒரு மாணவர் மட்டுமே போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய 2 மாணவர்களை போலீசார் தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
CHENNAI COLLEGE STUDENT ATTACK GOVT BUS