பாஜக நிர்வாகி கைது வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! கோட்டை விட்ட காவல்துறை!  - Seithipunal
Seithipunal


பாஜக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் அலெக்சிஸ் சுதாகர் மீது பதிவான 3 வழக்குகளை ரத்து செய்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்த உத்தரவு செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கடந்த ஆண்டு ஜூனில், மாமல்லபுரத்தில் உள்ள பண்ணை வீட்டில் பிறந்தநாள் விழா நடைபெற்றபோது, சீர்காழியை சேர்ந்த ரவுடி சத்யா அங்கு வந்திருந்தார். அப்போது நடந்த துப்பாக்கி சண்டையில் சத்யாவும் போலீஸாரும் ஒருவருக்கொருவர் சுட்டனர். சத்யாவுக்கு துப்பாக்கி வழங்கியதாகக் கூறி அலெக்சிஸ் சுதாகர் கைது செய்யப்பட்டார்.

மேலும், ஆள்கடத்தல் மற்றும் பண மோசடி வழக்கில் கோவையில் உள்ள துடியலூர், குனியமுத்தூர் போலீஸார் அவரை கைது செய்தனர். பின்னர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். இதை அறிவுரை குழு பின்னர் ரத்து செய்ததால், அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில், தன்னை கைது செய்த மற்றும் சிறையில் அடைத்த 3 வழக்குகளை ரத்து செய்யக் கோரி, அவர் தாக்கல் செய்த மனுக்களை நீதிபதி ஜி.கே. இளந்திரையன் பரிசீலித்தார். விசாரணையின் போது, “கைது குறித்து மனுதாரருக்கும், அவரது குடும்பத்திற்கும் தகவல் வழங்கப்படவில்லை. இது உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களுக்கு எதிரானது” எனக் கூறி, கைதுகள் செல்லாது என்றும் வழக்குகள் ரத்து என்றும் தீர்ப்பு வழங்கினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

BJP person Arrest Chennai HC order


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->