திமுக அரசுக்கு 100-க்கு 100 மதிப்பெண் கொடுத்த அண்ணாமலை.. தமிழக அரசுடன் நாங்கள் இருப்போம்.! பரபரப்பு பேட்டி.!!
annamalai says about 100 mark for dmk govt
திருவண்ணாமலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, குன்னூரில் முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 14 பேர் உயிரிழந்த சம்பவத்தின்போது மீட்பு பணியில் தமிழக முதல்வரும், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் மிக சிறப்பாக செயல்பட்டனர்.
மிகவும் துரிதமாக பணிகளை செய்தனர். ஹெலிகாப்டர் எரியும்போது தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் தீயில் இருந்த ராணுவ வீரர்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டுள்ளனர். இதற்காக நூற்றுக்கு நூறு மதிப்பெண் வழங்க வேண்டும். தமிழக முதல்வரில் தொடங்கி கடைசி மனிதன் வரை, 3 நாட்களுக்கு தமிழக அரசு செய்த மீட்பு பணியின் மூலம் இந்தியாவின் பெருமைமிகு மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.
அரசியலுக்காக எதை வேண்டுமானாலும் பாஜக குற்றம் சுமத்தாது. இந்த சம்பவத்தில் நாங்கள் தமிழக அரசுடன் இருப்போம். உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க பாஜக தயாராக உள்ளது. மத்தியில் உள்ள பாஜக அரசின் சாதனைகளையும், தமிழகத்தில் திமுக அரசு செய்யும் தவறுகளையும் முன்வைத்து நாங்கள் தேர்தல் பிரச்சாரம் செய்வோம். சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிடுபவர்களை தேசிய பாதுகாப்புச் சட்டம் மற்றும் குண்டர் சட்டத்தில் தமிழக காவல்துறை கைது செய்து வருகிறது. அரசியல் காழ்ப்புணர்ச்சியாலும் , பாஜகவின் வளர்ச்சியைத் தடுக்கவும் இதுபோல செய்கின்றனர்என தெரிவித்துள்ளார்.
English Summary
annamalai says about 100 mark for dmk govt