'ஜெய் ஹிந்த்! ஜெய் பாரத்! ; 18,000 அடி உயரத்தில் இருந்து பேரனுடன் ஸ்கை டைவிங் செய்த 80 வயது முதியவர்..!
80 year old man skydives with his grandson from 18000 feet
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஸ்கை டைவிங்கில், இந்தியாவைச் சேர்ந்த 80 வயது முதியவர் ஒருவர் தனது பேரனுடன் 18,000 அடி உயரத்தில் இருந்து குதித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
இந்தியாவின் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர் அங்கித். ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இவருக்கு ஸ்கை டைவிங்கில் அதிக ஆர்வம் உள்ளது. இந்நிலையில், அங்கித் தனது தாத்தாவுடன் ஏற்கெனவே 15,000 அடி உயரத்தில் இருந்து குதித்துள்ள நிலையில், தற்போது இருவரும் சேர்ந்து 18,000 அடி உயரத்தில் இருந்து குதிக்க முடிவு செய்தனர்.

இதனையடுத்து, விமானத்தில் ஏறும் முன் அங்கித் தனது 80 வயது தாத்தாவிடம், 'பயப்பட வேண்டாம்' என கூறியுள்ளார். அதற்கு தாத்தா 'யார் பயந்தது' என கூறி விமானத்தில் இருந்து பேரன் அங்கித்துடன் பாராசூட் மூலம் பறந்து வந்து குதித்து வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளார்.
அப்போது இந்திய தேசிய கொடியுடன் தரையிறங்கிய தாத்தா 'ஜெய் ஹிந்த்! ஜெய் பாரத்! ஜெய் ஹரியானா!' என தேசபக்தியுடன் உற்சாகமாக குரல் கொடுத்துள்ளார். இந்த வீடியோவை அங்கித் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ள நிலையில் இந்த வீடியோ வைரலாகியுள்ளது.
English Summary
80 year old man skydives with his grandson from 18000 feet