ராமநாதபுரம் கொடூரம்...! பிஞ்சுயிரைப் பறித்த மிருகங்களை கூண்டோடு ஒடுக்குங்க....! - கொதித்தெழுந்த பிரேமலதா விஜயகாந்த்
Ramanathapuram cruel Put animals that snatched life baby cage angry Premalatha Vijayakanth
பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராமநாதபுரத்தில் 5 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் குறித்து ஆழ்ந்த வேதனையும் கடும் கவலையும் தெரிவித்துள்ளார்.ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் நகரில் அதிகாலை நேரத்தில் வீட்டில் பாதுகாப்பாக தூங்கிக்கொண்டிருந்த 5 வயது சிறுமி திடீரென மாயமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பின்னர், அச்சிறுமி பக்கத்து வீட்டு கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பொதுமக்களை சோகத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.சிறுமி தவறி கிணற்றில் விழுந்து உயிரிழந்தாரா? அல்லது மர்ம நபர்களால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டாரா? அதற்கும் மேலாக, ஏதேனும் கொடூர குற்றச்செயலுக்கு ஆளாக்கப்பட்டாரா? என்ற பல்வேறு கேள்விகளும் சந்தேகங்களும் மக்கள் மத்தியில் தீவிரமாக எழுந்துள்ளன.

பெண் குழந்தைகளுக்கு எதிரான இதுபோன்ற கொடூர சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருவது மிகுந்த அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்துகிறது. வீட்டுக்குள் பாதுகாப்பாக உறங்கிக்கொண்டிருக்கும் குழந்தைக்கே பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகியிருப்பது சமுதாயத்திற்கே மிகப்பெரிய எச்சரிக்கை மணி என பார்க்கப்படுகிறது.
எத்தனை பாதுகாப்புத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டாலும், எத்தனை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், இதுபோன்ற சம்பவங்களை முழுமையாக தடுக்க முடியாத நிலை மக்கள் மத்தியில் பெரும் வேதனையை உருவாக்கியுள்ளது. பாதுகாப்பு தேடி மக்கள் இனி எங்கு செல்வார்கள் என்ற கேள்வி தீவிரமாக எழுந்துள்ளது.
இந்த கொடூர சம்பவத்தின் பின்னணியில் உள்ள உண்மைகள் அனைத்தும் விரைந்து வெளிச்சத்துக்கு கொண்டு வரப்பட வேண்டும். சம்பவத்துக்கு காரணமான உண்மைக் குற்றவாளிகள் யார் என்பதைக் கண்டறிந்து, அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி மிகக் கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த குழந்தையின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும் மனமார்ந்த அனுதாபத்தையும் தெரிவித்துள்ளார். குழந்தையின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Ramanathapuram cruel Put animals that snatched life baby cage angry Premalatha Vijayakanth