தமிழக சட்டமன்ற தேர்தலில் 78 தொகுதிகளை கேட்கும் படி மோடிக்கு கடிதம் எழுதியுள்ள அண்ணாமலை: அதிமுக தலைவர்கள் அதிர்ச்சி..! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து 78 தொகுதிகளை பெறவேண்டும் என பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இதனால் அதிமுக தலைவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அண்ணாமலை, பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: 

தமிழ்நாட்டில் பாஜக-அதிமுக கூட்டணி ஏற்பட்டுள்ள நிலையில், கூட்டணி ஆட்சி அமையும் வகையில் அதிமுக 02 தொகுதியில் போட்டியிட்டால் பாஜக ஒரு இடத்தில் போட்டியிடவேண்டும் என்ற வகையில் தொகுதிகளை பிரிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், ஒரு சில சட்டமன்ற தேர்தலில் பாஜக 02-ஆம் இடம் வந்தது. அதிமுக 03-ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு 19.4 சதவீதம் ஓட்டுகள் கிடைத்தது. பாஜக கூட்டணி 11.4 சதவீத ஓட்டுக்கள் பெற்றது. அதிமுக-பாஜக பலத்தின் அடிப்படையில் தொகுதி பங்கீட்டை பெறவேண்டும்’ என அந்த கடிதத்தில் அண்ணாமலை  குறிப்பிட்டுள்ளார். 

இவரது கடிதம் அதிமுக எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், அதிமுக – பாஜக கூட்டணியை உடைக்கும் செயலாக இருப்பதாகவும், அவர் மீது பாஜக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர். 

இதுகுறித்து எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய ஆதரவாளரும், அதிமுக வக்கீலுமான மணிகண்டன் குறிப்பிடுகையில், அண்ணாமலையின் முக்கிய நோக்கமே, பாஜக அதிமுக கூட்டணி வரக்கூடாது என்பது தான். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட கூட்டணி உடைய முக்கிய காரணமே அண்ணாமலைதான் என்று குறிப்பிட்டுள்ளார். இவரது பொய்யான பேச்சை நம்பிய டெல்லி தலைமை, தனியாக போட்டியிட வைத்தது. ஆனால் தமிழ்நாட்டில் ஒரு தொகுதியில் கூட அவரால் வெற்றிபெற முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், மத்தியில் ஆட்சி அமைப்பதிலும் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. தமிழ்நாட்டில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்திருந்தால் குறைந்தது 15 இடங்களை வென்றிருக்கலாம். இதன் பின்னரே இவரை அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் புரிந்து கொண்டனர். இதனால் தான் பாஜக மாநில தலைவர் பதவியை பறித்தனர் என்று தெரிவித்துள்ளார். 

மேலும், சமீபத்தில் மதுரையில் நடந்த பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், அமித்ஷா  அண்ணாமலையை கடுமையாக எச்சரிக்கை செய்ததாகவும், இதையும் மீறி அதிமுக கூட்டணியை உடைக்க முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என்று மணிகண்டன் குறிப்பிட்டுள்ளார் 

இதனை தொடர்ந்து அவர் குறிப்பிடுகையில், பாஜகவின் மாநில தலைவர்களில் யார் வீட்டிலாவது வருமானவரித்துறை சோதனை நடத்தியது இல்லை. ஆனால், அண்ணாமலையின் உறவினர் வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடந்தது. அவரை பாஜக மேலிடம் கட்டம் கட்டி வைத்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

அண்ணாமலையின் நோக்கம் அதிமுகவுடன் கூட்டணி சேரக்கூடாது, தேர்தலில் தோல்வியை தழுவ வேண்டும். அதிமுகவை அழிக்க வேண்டும் என்பது தான். அத்துடன், பாஜகவையும் தமிழ்நாட்டில் கால் ஊன்ற விடகூடாது என்பது தான். இதற்கான வேலையில் அவர் ஈடுபட்டுள்ளார். உடனடியாக பாஜக தலைமை அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Annamalai has written a letter to Modi asking for 78 seats in the Tamil Nadu Assembly elections


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->