பரபரப்பான அரசியல் சூழலில்.. டெல்லிக்கு விரைகிறார் அண்ணாமலை.!! - Seithipunal
Seithipunal


தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தற்போது என் மண் என் மக்கள் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் வழியாக மேற்கொண்டு வந்த பாதயாத்திரை தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலை கருத்தில் கொண்டு பிப்ரவரி மாதம் 10ஆம் தேதிக்குள் பாதயாத்திரை முடிக்க வேண்டும் என டெல்லி தலைமை அண்ணாமலை அறிவுறுத்தி இருந்ததாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் நேற்று சென்னையில் நடைபெற்ற தெறி பாஜக செயல்வீரர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் அண்ணாமலை கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் கதவுகள் எப்போதும் திறந்து இருப்பதாக பேசியிருந்ததோடு அதிமுகவை மறைமுகமாகவும் விமர்சனம் செய்திருந்தார். அண்ணாமலை பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் இன்று மாலை அவர் டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாளை மாலை டெல்லியில் உள்ள மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் நடைபெறும் பங்கேற்பதற்காக இன்று மாலை விமானம் மூலம் அண்ணாமலை செல்வதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த பொங்கல் விழாவில் கலந்து கொள்ளும் அண்ணாமலை பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி நாட்டார் உள்ளிட்டோரை சந்திக்க உள்ளதாகவும் டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Annamalai going to Delhi today


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->