நள்ளிரவில் சாத்தனுர் அணையை திறந்துவிட்ட சாத்தான் அரசு! அதிமுக தரப்பில் கடும் கண்டனங்கள்! - Seithipunal
Seithipunal


அதிமுகவின் ஐடி விங்க்-ன் அதிகாரபூர்வ சமூகவலைத்தள பக்கத்தில் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "10,000 கன அடி, 30,000 கன அடி என்றும், திடீரென நள்ளிரவில் தாசில்தாருக்கு மட்டும் ஒரு கடிதம் எழுதுவதாக நாடகமாடிவிட்டு 1.68 லட்சம் கன அடி நீரை திறந்து விட்டிருக்கிறதா திமுக அரசு?

தாசில்தாருக்கு கொடுக்கப்பட்ட கடிதம் என்பது மக்களுக்கான முன்னறிவிப்பு கிடையாது.

தாசில்தாரிடம் இருந்து  மக்களுக்கு 1.68 லட்சம் கனஅடி வெளியீட்டுக்கான தகவல் சென்றது என்பதற்கு என்ன ஆதாரம்? தண்டோரா போடப்பட்டதா? மக்கள் வெளியேற வேண்டும் என்று ஆட்டோக்களில் அறிவிப்பு சொல்லப்பட்டதா? Atleast அறிவிப்பு பலகை எங்காவது வைக்கப்பட்டதா?

நள்ளிரவில் தங்களுக்கு தெரியாமல் சாத்தனூர் அணை திறந்துவிட்டதாக மக்கள் குற்றச்சாட்டு வைக்கிறார்களே? இதற்கு யார் பொறுப்பு?

சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த சதிகார அரசு. நிர்வாகம் என்றால் என்னவென்றே தெரியாத ஸ்டாலின் அரசு. சாத்தனூரை திறந்துவிட்ட சாத்தான் அரசு" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

AIADMK IT Wing condemn to DMK MK Stalin Govt


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->