அதிமுகவின் அஸ்திவாரத்தை உலுக்கும் வகையில் ஓபிஎஸ் - உயர்நீதிமன்றத்தில் பரபரப்பு!
AIADMK GS Elec Case OPS vs EPS Tamilnadu
அதிமுகவின் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் பி.எஸ்.ராமன், ஸ்ரீராம், மணிசங்கர் ஆகியோர் செய்த வாதம் நிறுவைடைந்துள்ளது.
எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் வைத்தியநாதன், விஜயநாராயண் ஆஜராகி தங்களது வாதத்தை முன்வைத்துள்ளனர்.
அதில், "பொதுக்குழு கூட்ட தீர்மானங்களுக்கு எதிரான வழக்கு நிலுவையில் உள்ளதாக கூறி, தேர்தலுக்கு தடை கூற முடியாது.
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கும் சனி, ஞாயிறு கிழமைகளில் தான் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.
உச்சநீதிமன்ற வழக்கு முடிவுக்கு வந்த பின்னரே, பொதுச் செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்டது. பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் வழக்கு தொடரவில்லை.
கட்சிக்கு விரோதமாக செயல்பட்டு, எட்டு மாதங்களுக்கு முன்பு நீக்கப்பட்ட இந்த மூவரும் தான் வழக்கை தொடர்ந்துள்ளனர்.
அதிமுகவின் அஸ்திவாரத்தை உலுக்கும் வகையில் ஓ பன்னீர்செல்வத்தின் தரப்பு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது" என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு குற்றம் சாட்டியது.
ஓபிஎஸ் தரப்பின் பரபரப்பு வாதம் :
English Summary
AIADMK GS Elec Case OPS vs EPS Tamilnadu