வாக்காளர் திருத்தப் பணி முறைகேடு: தி.மு.க.வைக் கண்டித்து அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்!
ADMK protest SIR DMK
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் ஆளும் தி.மு.க.வினர், ஆட்சி அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, சிறப்புத் தீவிர வாக்காளர் திருத்தப் (SIR) பணிகளில் முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களை (BLO) தி.மு.க.வினர் மிரட்டி, பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாகவும், இதை ஆளும் தி.மு.க. அரசு கண்டும் காணாமல் இருப்பதாகவும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கண்டன ஆர்ப்பாட்டம்:
தி.மு.க.வின் இந்தச் செயல்பாட்டைக் கண்டித்து, காஞ்சிபுரம் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (நவம்பர் 20, வியாழக்கிழமை) நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
நேரம்: காலை 10 மணியளவில்
இடம்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் (காவலான் கேட்)
தலைமை: இந்த ஆர்ப்பாட்டம் முன்னாள் அமைச்சர்கள் வைகை செல்வன் மற்றும் சோமசுந்தரம் ஆகியோர் முன்னிலையில் நடைபெறும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.