எதிர்க்கட்சி துணை தலைவர் பதவி | தேர்தல் ஆணையத்தை குறிப்பிட்டு சபாநாயகர் அப்பாவு விளக்கம்!
ADMK OPS vs EPS Assembly 2022 Appavu
தமிழக சட்டப்பேரவையில் இரண்டாம் நாளான இன்று, எம்எல்ஏ ஓ பன்னீர்செல்வம் எதிர்க்கட்சித் துணைத் தலைவருக்கான இருக்கையில் அமரவே, அதிமுகவைச் சேர்ந்த எடப்பாடி பழனிசாமி தரப்பு எம்எல்ஏக்கள் கோஷம் எழுப்பினர்.
குறுக்கிட்ட அமைச்சர் துரைமுருகன் "இது குறித்து சபாநாயகர் நேரம் ஒதுக்கி பதிலளிப்பார் என சொல்லும் பொழுது எதிர்கட்சித் தலைவர் அமர்ந்து அதற்கான பெற்றுக் கொள்ளலாம். அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்வி நேரத்தை அனுமதிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவரை கேட்டுக்கொள்கிறேன்" என பதிலளித்தார்.
அப்பொழுது சபாநாயகருக்கு எதிராக இபிஎஸ் தரப்பினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபடவே, போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களையும் சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றுமாறு அவை காவலர்களுக்கு அப்பாவு உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரத்தில் பதிலளித்த சபாநாயகர் அப்பாவு, "எதிர்கட்சித் தலைவர் பதவி மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட பதவி. விதிப்படி எதிர்க்கட்சி துணைத்த லைவர் என்ற பதவியே இல்லை.
தனக்கான இருக்கையை மாற்றித்தர வேண்டும் என்று எம்.எல்.ஏ.க்கள் கேட்பதற்கு உரிமை உள்ளது. ஆனால் வேறு ஒருவருக்கான இடத்தை மாற்றுங்கள் என்று சொல்ல யாருக்கும் உரிமை கிடையாது. அலுவல் ஆய்வுக்குழு உறுப்பினர் என்பது சட்டமன்ற தலைவர் உரிமை. அதில் யாரும் தலையிட முடியாது.
தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி, அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் நான்தான் என்று ஓபிஎஸ் கடிதம் கொடுத்துள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர், துணை தலைவர் பதவிகளுக்கு எனக்கு வந்த பரிந்துரை கடிதத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிட்ட கையெழுத்திட்ட கடிதம் வந்தது" என்று சபாநாயகர் அப்பாவு விளக்கமளித்துள்ளார்.
அப்பொழுது குறுக்கிட்ட அமைச்சர் துரைமுருகன் "இது குறித்து சபாநாயகர் நேரம் ஒதுக்கி பதிலளிப்பார் என சொல்லும் பொழுது எதிர்கட்சித் தலைவர் அமர்ந்து அதற்கான பெற்றுக் கொள்ளலாம். அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்வி நேரத்தை அனுமதிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவரை கேட்டுக்கொள்கிறேன்" என பேசினார்.
இதனைத் தொடர்ந்து கடும் அமலியில் ஈடுபட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவையின் மையத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக சட்டமன்ற தலைவர் அப்பாவு சட்டப்பேரவையின் மையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களையும் சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றுமாறு அவை காவலர்களுக்கு உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும் சட்டப்பேரவையில் இருந்து அவை காவலர்களால் வெளியேற்றப்பட்டனர்.
English Summary
ADMK OPS vs EPS Assembly 2022 Appavu