திருமாவளவனை சுத்துப்போட்ட அதிமுகவினர்.! இது எப்போ நடந்துச்சு... சொல்லவே இல்லை.! - Seithipunal
Seithipunal


சென்னை, வானகரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த தனது தாயைக் காண்பதற்காக சென்ற திருமாவளவனை, அங்கு பொதுக்குழு கூட்டத்திற்காக வந்த அதிமுகவினர் சுத்துப்போட்டு, திருமாவளவனின் கையை பிடித்து குலுக்கி உள்ளனர்.

சென்னை வானகரத்தில் இன்று அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதன் காரணமாக வானகரம் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அந்த பகுதி முழுவதும் அதிமுகவினர் திரளாக கூடி இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த திருமாவளவனை அதிமுகவின் சூழ்ந்துகொண்டு கை குலுக்கியதாக அவரே தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

"அம்மாவுக்கு உடல்நலம் சரியில்லை. வானகரம் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரைக் காண அதிகாலை புறப்பட்டு சென்றேன். வானகரம் அருகே போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டேன். 

அதிமுக பொதுக்குழுவுக்கு வந்திருந்த அக்கட்சியினர் என்னைச் சூழ்ந்துகொண்டு கைக் குலுக்கியது நெகிழ்வாயிருந்தது" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

admk mebers with thirumavalavan


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!


செய்திகள்



Seithipunal
--> -->