திமுகவினர் மட்டுமே மாமன்னன் திரைப்படத்தை பார்க்கின்றனர் - அதிமுக ஜெயக்குமார்.! - Seithipunal
Seithipunal


சமூகநீதிக்கும், திமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது மாமன்னன் திரைப்படம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், மாமன்னன் திரைப்படத்தை திமுகவினர் மட்டுமே பார்க்கின்றனர் எனவும் மக்கள் யாரும் பார்க்கவில்லை என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர் சமூக நீதிக்கான தகுதி திமுகவிற்கு இருக்கிறதா என கேள்வி எழுப்பினார். மேலும் ஆதிதிராவிடர்களுக்கு முழுமையான அளவு கட்சியிலும், ஆட்சியிலும் முக்கியத்துவம் கொடுத்த ஒரே கட்சி அதிமுக தான்.

பொது தொகுதியில் ஆதிதிராவிடரை மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நிற்க வைத்தார்கள். திமுக நிற்க வைத்தார்களா எனவும் கேள்வி எழுப்பினார். மேலும் சமூக நீதியை நிலைநாட்டியது ஜெயலலிதா தான். சமூக நீதி, திராவிட மாடல் நாங்க தான் என்று எல்லாத்துக்கும் சொந்தம் கொண்டாடினால் தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என அவர் தெரிவித்துள்ளார்‌.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ADMK jayakumar speech about mamannan movie and DMK


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->