அதிமுகவின் முக்கிய புள்ளி கட்சியிலிருந்து நீக்கம் - எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு!
ADMK EPS Thanjai Kumanan
அதிமுகவின் தஞ்சை தெற்கு மாவட்டம், பட்டுக்கோட்டை நகர 31-வது வார்டு கழகச் செயலாளர் குமணன் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
இது குறித்த அவரின் அறிக்கையில், “கழகத்தின் கொள்கை - குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும்; கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்டார்.
இந்தக் காரணத்தினால், தஞ்சாவூர் தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த R.K.குமணன், (பட்டுக்கோட்டை நகர 31-ஆவது வார்டு கழகச் செயலாளர்) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.
கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.