60% பேருக்கு உணவில்லையா? உணவு திட்டமா இது? -தூய்மைப் பணியாளர்கள் அவமதிப்பு விவகாரத்தில் EPS கடும் குற்றச்சாட்டு!
60percentage people food scheme EPS strongly accused insulting sanitation workers
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பதிவில் தமிழக அரசை கடும் வார்த்தைகளில் விமர்சித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள குற்றச்சாட்டு, “தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம்” என்ற பெயரில் பிரம்மாண்ட போட்டோஷூட் நடத்தி கம்பீரமாக விளம்பரம் செய்த முதலமைச்சர், திட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது முற்றிலும் தோல்வியடைந்துள்ளதாக எடப்பாடி குற்றம் சாட்டுகிறார்.

சென்னையில் கூட 60% பணியாளர்களுக்கு உணவு எட்டவில்லை, பல மணி நேரம் காத்திருந்தும் உணவு வழங்கப்படாத நிலை ஏற்பட்டதாகவும், இது திட்டமே இல்லாததை விட மோசமான அவல நிலை எனவும் அவர் பதிவில் சாடினார்.மேலும் கோவையில் செம்மொழிப் பூங்கா ஊழியர்களுக்குப் குப்பை வாகனத்தில் உணவு கொண்டு வரப்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்ததாக எடப்பாடி வலியுறுத்துகிறார்.
“தேர்தலுக்கு முன் கொடுத்த வாக்குறுதிகளை புறக்கணித்து, போராட்டம் நடத்தினால் ஜனநாயக உரிமையே பறிக்கப்படுகிறது. அதன் பின் Damage Control செய்ய ஒரு திட்டத்தை பெயருக்கு மட்டுமே தொடங்கி, அதை கூட சரியாக செயல்படுத்தாதது இன்றைய அரசின் உண்மையான முகத்தை காட்டுகிறது” என அவர் குறித்தார்.
“குப்பை வண்டியில் சாப்பாடு அனுப்பி அவமானப்படுத்தும் அளவுக்கு தாழ்ந்த நிர்வாகம் இது! சுயமரியாதை உள்ள யாராலும் ஏற்க முடியாத செயல் இது,” என்றும் பதிவில் தெரிவித்தார்.
எழுச்சியான தாக்கத்துடன் அவர் முடிக்கையில், “எதிர்க்கட்சியில் இருக்கும் போது மக்களை ஏமாற்றுவதிலும், ஆட்சியில் இருக்கும் போது அதே மக்களை இழிவுபடுத்துவதிலும், திமுகக்குச் சமம் இந்தியாவிலேயே இல்லை! தூய்மைப் பணியாளர்கள் பெற வேண்டிய மரியாதையுடன் இந்தத் திட்டத்தை உடனடியாக சரியாக செயல்படுத்த வேண்டும்,” என ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியை எடப்பாடி வலியுறுத்தினார்.
English Summary
60percentage people food scheme EPS strongly accused insulting sanitation workers