உங்கள் வீட்டில் செல்வம் கொட்டோ கொட்டுன்னு கொட்ட வேண்டுமா?? இதனை மட்டும் கடைபிடியுங்கள்!
how to gain more money
வீட்டில் செல்வம் செழிப்பதற்காக பல விஷயங்களை நாம் செய்வது உண்டு. ஆனால் உண்மையாகவே வீட்டில் லக்ஷ்மி குடியிருக்க நாம் சிலவற்றை செய்து தான் ஆகவேண்டும். பெரும்பாலும் ஏழ்மையாய் இருப்பவர்கள் அதனை நம்புவதில்லை. காரணம் அலட்சியம். ஆனால் பணக்காரர்கள் அனைவரும் ஏழ்மையாய் இருந்து தான் வந்தார்கள் என்பது தான் உண்மை.
ஒவ்வொருவரும் வீட்டில் தினமும் எழுந்ததும், முதலில் நமது உள்ளங்கைகள் அல்லது குழந்தையின் முகம் அல்லது சாமி படங்களை பார்க்கலாம். நிச்சயம் அதில் பலன் கிடைக்கும்.
வீட்டில் தினந்தோறும் குறைந்தபட்சம் ஒருமுறையாவது சாமி கும்பிட வேண்டும். வாரத்திற்கு இருமுறையாவது வீட்டைக் கழுவி, பூஜை அறையை சுத்தம் செய்து வழிபாடு செய்யவேண்டும்.
குபேர பொம்மையை வீட்டில் வைத்து சாமியாக வழிபட்டால் வீட்டில் செல்வம் சேரும் என்பது நம்பிக்கை. சிரிக்கும் குபேர பொம்மையை கிழக்கு திசையில் வைத்தால் வீட்டில் ஒற்றுமையும் சந்தோஷமும் அதிகரிக்கும். கிழக்கு திசையில் குபேர பொம்மையினை வைப்பதால் குடும்பத்திற்குள் ஏற்படும் சண்டைகள், சச்சரவு, வாக்குவாதத்தினால் ஏற்படும் மனகஷ்டம் தீரும்.
குபேர பொம்மையை தென்கிழக்கு திசையில் வைத்தால் எதிர்பாராத அதிர்ஷ்டமும், அதிக வருமானமும் கிடைக்கும். இவை அனைத்தும் பணக்காரர்கள் கடைபிடிக்கும் பழக்கங்கள் ஆகும்.