நாவில் எச்சில் ஊரும் "முட்டை கீமா".! ரெசிபி இதோ..! - Seithipunal
Seithipunal


சுவை மிகுந்த நாவில் எச்சில் ஊரும் முட்டை கீமா செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க,

தேவையான பொருட்கள்:

வேகவைத்த முட்டை - 5

வெங்காயம் - 2

தக்காளி - 3

பச்சை மிளகாய் - 3

இஞ்சி பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

கரம் மசாலா தூள் - 1/2 டீஸ்பூன்

கொத்தமல்லி இலை - சிறிதளவு

எண்ணெய், உப்பு - தேவையான அளவு

பிரியாணி இலை -1 

நட்சத்திர பூ - 1

ஏலக்காய் - 2

கிராம்பு - 2

பட்டை - 1

செய்முறை:

முதலில் வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் கொத்தமல்லி ஆகியவற்றை பொடி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பிறகு வேகவைத்த முட்டைகளை துருவி எடுத்து கொள்ளவும். பின்பு அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய், நட்சத்திர பூ, பிரியாணி இலையை சேர்க்கவும்.

பிறகு வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு நன்கு வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியவுடன், இஞ்சி பூண்டு விழுது போட்டு, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின்பு தக்காளி சேர்த்து, பாதி வதங்கியதும், இதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், தேவையான உப்பு, கரம் மசாலா தூள் போட்டு கிளறவும்.

இதையடுத்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் மிதமான தீயில் கொதிக்கவிடவும். பின்பு குருவி வைத்துள்ள முட்டையை சேர்த்து நன்கு கிளறவும். பிறகு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி இறக்கினால் சுவையான முட்டை கீமா ரெடி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tasty Muttai keema recipe


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->