வெறும் 485 ரூபாய் பணத்திற்காக இரட்டைக் கொலை செய்த வாலிபர் கைது.! - Seithipunal
Seithipunal


வெறும் 485 ரூபாய் பணத்திற்காக இரட்டைக் கொலை செய்த வாலிபர் கைது.!

கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூரு மாவட்டம் ஹன்சூர் பகுதியில் அரவை மில்லில் பணியாற்றிய இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, போலீசார் சிசிடிவி கேமரா காட்சிகளை சேகரித்து ஆராய்ந்து வந்தனர்.

அதில் "அரவை மில்லின் இரவுக் காவலராக பணியாற்றும் வெங்கடேஷ் என்பவரும், அதே மில்லில் பணியாற்றும் சண்முகா என்பவரும் நள்ளிரவில் போர்வையால் தலையை மூடி உறங்கிக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில், மர்ம நபர் ஒருவர் இருவரையும் இரும்புத் தடியால் அடித்துக் கொலை செய்வது பதிவாகி இருந்தது.

அந்த மர்மநபர் முகத்தை மறைத்திருந்ததால், அவரை போலீஸாரால் அடையாளம் காண முடியவில்லை. இதனால், போலீசார் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தியதில், மோப்ப நாய் அதே பகுதியை சேர்ந்த 26 வயது இளைஞர் ஒருவரை கவ்வியது. உடனே போலீசார் அந்த நபரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

அப்போது அந்த நபர், அரவை மில்லை கடக்கும்போது, காவலாளி வெங்கடேஷை பார்த்தேன். ஆதரவற்ற முதியவர் தனது சேமிப்புகளை மொத்தமாக வைத்திருப்பார் என்று நம்பி கொலை செய்ததாகவும் அங்கே சண்முகாவும் இருந்ததால் அவரையும் கொன்றதாகவும் தெரிவித்துள்ளார். 

மேலும், அவருடைய சட்டை பையில் வெறும் 485 ரூபாய் பணம் மட்டுமே இருந்ததாகத் தெரிவித்தார். பணத்துக்காக இரட்டைக்கொலை செய்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

youth arrested for kill two peoples in karnataga


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->