காதலியை டேங்கர் லாரி முன்பு தள்ளி கொலை செய்த காதலன் - தெலுங்கானாவில் பயங்கரம் - Seithipunal
Seithipunal


தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் அருகே பாச்சுப்பள்ளி பகுதியில் நேற்று மாலை இளம் பெண் ஒருவரை வாலிபர் ஒருவர் தண்ணீர் டேங்கர் லாரி
முன்பு தள்ளிவிட்டார்.

இதில் அந்த பெண் லாரி சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதை பார்த்த அப்பகுதி மக்கள் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதன் பின்னர் போலீசார் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தியதில் அந்த பெண் காமரெட்டி மாவட்டத்தைச் சேர்ந்த பிரமிளா என்பதும், அவர் பாச்சு பள்ளியில் உள்ள பிரஜ்டீஜ் ஷோரூம் இல் விற்பனையாளராக பணிபுரிந்து வந்ததும் தெரிய வந்தது.

மேலும் இவர் கடந்த கடந்த ஆறு மாதங்களாக திருப்பதி என்பவரை திரு காதலித்து வந்துள்ளார், பின்னர் அவரிடம் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். இந்த பிரச்சனை காரணமாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு முற்றியதில் ஆத்திரமடைந்த திருப்பதி காதலியை தண்ணீர் டேங்கர் லாரி முன்பு தள்ளிவிட்டு கொலை செய்தது தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் திருப்பதியை இன்று கைது செய்து அவரிடம் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். காதலன் ஒருவன் காதலியை தண்ணீர் டேங்கர் லாரி முன்பு தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம்  அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

youth arrested for kill girl friend in telunagana


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->