கேரளாவில் சோகம் : குளியல் அறையில் ஒன்பது மாதக் குழந்தையுடன் பிணமாக கிடந்த தாய்.!! நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


கேரளாவில் சோகம் : குளியல் அறையில் ஒன்பது மாதக் குழந்தையுடன் பிணமாக கிடந்த தாய்.!! நடந்தது என்ன?

கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் மாவட்டம் புத்தந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் ராஜூ ஜோசப்டின்சி. இவரும் வெஞ்ஞாறமூடு பகுதியைச் சேர்ந்த அஞ்சு என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இதையடுத்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு டேவிட் என்னும் ஒன்பது மாதக் குழந்தை உள்ளது.

இந்நிலையில் அஞ்சு, தன் ஒன்பது மாத குழந்தையுடன் வீட்டுக் குளியல் அறையில் தங்கள் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளித்துள்ளார். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தபோது அஞ்சுவும், அவரது மகனும் தீயில் கருகி பிணமாகக் கிடந்துள்ளனர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதற்கிடையே உயிரிழந்த அஞ்சுவின் தந்தை பிரமோத் கடினங்குளம் போலீஸில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், “எனது மருமகன் ராஜூ ஜோசப்டின்சிக்கு வேறு சில பெண்களோடு தொடர்பு இருந்தது. இது தொடர்பாக, கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது. 

இதனால் தான் என் மகள் தற்கொலை செய்து கொண்டுள்ளார். என் மகள் சாவில் ஏதோ மர்மம் உள்ளது” என்றுத் தெரிவித்துள்ளார். ஒன்பது மாத குழந்தையுடன் தாய் குளியல் அறையில் கருகிய நிலையில் கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

woman sucide with nine month baby in kerala


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->