அடப்பாவி! சிறுமிக்கு நடந்த கொடூரம்...! துப்பாக்கியால் சுட்டுக் பிடித்த பெண் சப்-இன்ஸ்பெக்டர்!
What a cruel thing happened little girl female sub inspector who shot her gun
உத்தர பிரதேசம் லக்னோ பகுதியை சேர்ந்தவர் கமல் கிஷோர் எனபவர் . இவர் சம்பவத்தன்று அப்பகுதியை சேர்ந்த 4 வயது சிறுமியை புதருக்குள் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

மறுபக்கம் சிறுமியை காணவில்லை என பெற்றோர் தேடிய போது அதிர்ச்சி தரும் விதமாக, சிறுமி ரத்தக்காயத்துடன் வீட்டுக்கு வந்து தனக்கு நேர்ந்த கொடுமையை தெரிவித்துள்ளார்.அதனைக் கேட்டு அதிர்ந்து போன பெற்றோர், லக்னோ காவலில் புகார் செய்தனர்.
அதன் பேரில் பெண் சப்-இன்ஸ்பெக்டர் 'சகினா கான்' விசாரணை நடத்திய போது கமல் கிஷோர் மதேகஞ்ச் பகுதியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.சற்றும் தாமதிக்காமல் உடனே காவலர்கள் அவரை பிடிக்க விரைந்து சென்றனர்.
காவலர்களை பார்த்ததும் தப்ப முயன்ற கமல் கிஷோரை சப்-இன்ஸ்பெக்டர் சகினா கான் துப்பாக்கியால் சுட்டார். இதில் அவரது காலில் குண்டு பாய்ந்து கீழே விழுந்தார்.
அதன் பிறகு கமல் கிஷோரை கைது செய்த காவலர்கள் மருத்துவமனைக்யில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கமல் கிஷோர் மீது ஏற்கனவே பல வழக்குகள் இருப்பதாக தற்போது காவலர்கள் தெரிவித்தனர்.
English Summary
What a cruel thing happened little girl female sub inspector who shot her gun