அமெரிக்காவின் 50% வரிக்கு பதிலடி கொடுக்க வேண்டும் – அரவிந்த் கெஜ்ரிவால்
We must retaliate against America 50 tax Arvind Kejriwal
இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள கூடுதல் 25 சதவீத வரி நேற்று முதல் அமலுக்கு வந்தது. ஏற்கனவே இருந்த 25 சதவீத வரியுடன் சேர்ந்து, மொத்தம் 50 சதவீதம் வரி இந்தியா ஏற்றுமதிக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், மத்திய அரசு மாற்று வழிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், வரி விவகாரம் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கடுமையாகப் பேசியுள்ளார்.
அவர் கூறியதாவது:“அமெரிக்கா 50 சதவீதம் வரி விதித்த நிலையில், மத்திய அரசின் நடவடிக்கை மிகுந்த பலவீனமாக உள்ளது. அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பருத்தி பொருட்களுக்கான 11 சதவீதம் வரியை தள்ளுபடி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது உள்ளூர் வணிகத்தையே பாதிக்கும் நிலையை உருவாக்கும்.
மற்ற நாடுகள் அமெரிக்காவின் நடவடிக்கைக்கு அடிபணியவில்லை; அவர்கள் கூடுதல் வரி விதித்து பதிலடி கொடுத்துள்ளனர். நாமும் அதேபோல் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அமெரிக்கா 50 சதவீதம் வரி விதித்தால், இந்தியா 100 சதவீதம் வரி விதிக்க வேண்டும். மொத்த நாடும் இந்த முடிவுக்கு ஆதரவாக இருக்கும். எந்த நாடும் இந்தியாவை புறக்கணிக்க முடியாது; ஏனெனில் இந்தியா என்பது 140 கோடி மக்களை கொண்ட வலிமையான நாடு” என கெஜ்ரிவால் வலியுறுத்தினார்.
English Summary
We must retaliate against America 50 tax Arvind Kejriwal