உத்தரகாண்டில் கொடூர விபத்து! பலியான 8 பக்தர்கள்! பலர் படுகாயம்! - Seithipunal
Seithipunal


உத்தரகாண்டில் பள்ளத்தாக்கில் வாகனம் கவிழ்ந்த விபத்தில் 8 பேர் பலியாகியுள்ளனர். ருத்ரபிரயாக் பகுதியில் பயணிகள் சென்ற வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம், ரிஷிகேஷ் பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் பயணிகளுடன் சென்ற டெம்போ வாகனம் கட்டுப்பாட்டை இழந்ததால் ருத்ர பிரயாக் பகுதியில் அலகனந்தா ஆற்றில்  கவிழுந்து விபத்துக்குள்ளாகியது.

இந்த விபத்தில் வாகனத்தில் சிக்கியுள்ள 17 பேரை மீட்கும் பணிகளில் காவல்துறையினர் மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த விபத்தில் வாகனத்தில் பயணித்த 17 பேரில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக உத்தரகாண்ட் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளனர். 

மேலும், விபத்தில் படுகாயமடைந்த 9 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். 

விபத்து குறித்து விசாரிக்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Uttarakhand Road Accident Alakananda River


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->